ADDED : ஜன 04, 2026 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட தோப்பூர் ஏரியில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மண் கடத்துவதாக போச்சம்பள்ளி தாசில்தார் அருளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அங்கு சென்ற தாசில்தார் அருள், மண் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, பாரூர் போலீசில் ஒப்படைத்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

