/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியற்ற கடைகளை அகற்றச்சென்ற அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
/
அனுமதியற்ற கடைகளை அகற்றச்சென்ற அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
அனுமதியற்ற கடைகளை அகற்றச்சென்ற அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
அனுமதியற்ற கடைகளை அகற்றச்சென்ற அலுவலர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
ADDED : ஜன 30, 2026 04:43 AM
ஓசூர்: ஓசூர், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் அனுமதியின்றி வைத்திருந்த கடைகளை அகற்றச்சென்ற மாநகராட்சி அலுவலர்களுடன், வியா-பாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் மீன்கள் வியாபாரம் செய்ய, 158 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஏராளமான கடைகளை வியாபாரிகள் டெண்டர் எடுத்து வியா-பாரம் செய்து வருகின்றனர். ஒரு சிலர், டெண்டர் எடுக்காமல் மார்க்கெட்டில் அனுமதியின்றி வெளிப்பகுதியில் காய்கறி வியா-பாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதி-காரிகளுக்கு புகார்கள் சென்றது. ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஷபீர் ஆலம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்-போது டெண்டர் எடுத்து கடை வைக்காத வியாபாரிகளின் காய்-கறி கடைகளை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ஷபீர் ஆலம் உத்த-ரவிட்டார். இதையடுத்து டெண்டர் எடுக்காமல் கடை வைத்தவர்கள், அவர்களாகவே தங்கள் கடைகளை அகற்றினர். மற்ற கடைக-ளுக்கு சென்ற மாநகராட்சி கமிஷனர், கடையின் முன் அமைத்-துள்ள ஷெட்டுகளை அகற்ற கூறினார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பா.ம.க.,வினர் கமிஷனர் ஷபீர் ஆலமிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.
கமிஷனர் உத்தரவுப்படி, கடைகளுக்கு முன்னால் அமைக்கப்-பட்டிருந்த ஷெட்டை அகற்ற சென்றபோது, அதை அகற்ற விடாமல் அலுவலர்களுடன் வியாபாரிகள் தொடர்ந்து வாக்குவா-தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் ஓரிரு நாட்களில் ஷெட்களை அகற்றுமாறு கூறி விட்டு அலுவ-லர்கள் சென்றனர்.

