ADDED : மார் 08, 2026 07:22 AM
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி
மாவட்டம், தளி அடுத்த கும்ளாபுரம் அருகே, ஜிகூர் பகுதியில் உள்ள
தனியார் விவசாய நிலத்தில், பாறைகளை உடைத்து புதையல் எடுக்க முயற்சி
நடப்பதாக, தளி போலீசா-ருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற
எஸ்.ஐ., ராஜா சங்கிலிகருப்பன் மற்றும் போலீசார், பாறைக்கு பூஜை
செய்து கொண்டி-ருந்த பெண் உட்பட, 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும், பாறையை உடைக்க வைத்திருந்த, 43 டெட்டெ-னேட்டர் குச்சிகள்,
மெக்கர் பாக்ஸ் மற்றும் வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நான்கு
பேரிடமும் விசாரித்த போது, தளி அருகே ஒன்னட்டி கிராமத்தை சேர்ந்த
விவசாயி மாருதி, 37, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே
மஞ்சனப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழி-லாளி வேணு, 38, பெங்களூரு
ஒசகோட்டையை சேர்ந்த லாவண்யா, 39, தேவனஹள்ளி பையபுரா பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார், 24, என்பது தெரிந்தது. அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்-தனர்.
தளி
அருகே பேலகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்-கடேஷ் என்பவர்,
பாறையின் அடியில் புதையல் இருப்பதாக கூறியதாகவும், அதன் பேரில் கடந்த,
4 மாதங்களாக அப்பகு-தியை நோட்டமிட்டு, புதையலை எடுக்க நேற்று பூஜை
செய்த-தாக கைதான, 4 பேரும் தெரிவித்தனர். இதில், லாவண்யா தன்னை
பத்திரிகை நிருபர் என கூறியுள்ளார். அதனால், அவர் எந்த பத்திரிகையில்
பணியாற்றி வருகிறார் என, போலீசார் விசா-ரிக்கின்றனர்.

