தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/முத்தரப்பு கூட்டம்

முத்தரப்பு கூட்டம்

முத்தரப்பு கூட்டம்


ADDED : ஏப் 26, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலெக்டர் தினேஷ்குமார்: வரும், 28ல், 'மா' விற்கு விலை நிர்யணம் செய்ய விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் கூடிய முத்தரப்பு கூட்டம் நடக்கிறது. இதில், 'மா' விவசாயிகள் பங்கேற்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர்: கிருஷ்ணகிரி அணையின் பாசன பரப்பு அதிகரித்துள்ளது. எனவே, வலது மற்றும் இடது புறக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்திட வேண்டும்.

பாலேகுளி -சந்துார் ஏரி கால்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு: மாங்கனி கண்காட்சி உரிய நேரத்தில் தொடங்க வேண்டும். பாலேகுளி -சந்துார் ஏரி வரை உள்ள, 28 ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் பகுதி மழையால் சேதமாகி உள்ளதை சீரமைக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக நிலம் வழங்கியவர்களில், நாகரசம்பட்டி டவுன் பஞ்.,ல் மட்டும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

கலெக்டர் தினேஷ்குமார்: மாங்கனி கண்காட்சி, மே 2வது வாரத்தில் தொடங்கும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, கால்வாய் சீரமைக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது. இணை இயக்குனர்கள் (வேளாண்மை) பச்சையப்பன், (தோட்டக்கலை) இந்திரா மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us