/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
/
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
ADDED : ஏப் 17, 2025 01:28 AM
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, மன்ற நிறைவு விழா எனும் முப்பெரும் விழா நடந்தது. முதல்வர் ரவி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ் துறை தலைவர் சித்திரைசெல்வி, பேராசிரியர்கள் சங்கீதா, புருஷோத்தமன், உடற்கல்வி இயக்குனர் (பொ) அருண் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகவியல் துறை தலைவர் (பொ) செந்தில்குமார் வரவேற்றார்.
விழாவில், பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும், நுண்களை மன்ற நிகழ்வுகள், கல்வியில் முதன்மை பெற்ற மாணவ, மாணவியர் என, 200க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் வென்ற கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், உதவி பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியை தமிழ் துறை உதவி பேராசிரியர் சுபா தொகுத்து வழங்கினார். கணிதவியல் துறை தலைவர் ஐயப்பன்
நன்றி கூறினார்.