sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

த.வா.க.,வினர் ஆர்ப்பாட்டம்

/

த.வா.க.,வினர் ஆர்ப்பாட்டம்

த.வா.க.,வினர் ஆர்ப்பாட்டம்

த.வா.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 25, 2025 01:35 AM

Google News

ADDED : செப் 25, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின், மாநில தொழிற்சங்க செயலாளர் கார்த்திக் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பிய கட்சியினர், கடந்த, 3 மாதங்களில் மட்டும், ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மொத்தம், 446 பேர் நாய் கடிக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், தெருநாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us