/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்சாரம் தாக்கி முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
/
மின்சாரம் தாக்கி முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
ADDED : டிச 11, 2024 07:01 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, மின்சாரம் தாக்கி, முதியவர் உட்பட உட்பட இருவர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த தாளமடுவை சேர்ந்த விவசாயி வேலு. அவரது வீட்டில் மீன் குட்டை அமைக்கும் பணிகளுக்காக நேற்று, தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை சேர்ந்த வேலு, 35 என்ற பொக்லைன் ஆப்பரேட்டர் வந்தார். பொக்லைன் மூலம், குழி தோண்டும் பணியில் ஈடுபட்டார். மதியம் சாப்பிட்டு விட்டு, அருகே மிட்டப்பள்ளி பஞ்.,க்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் மோட்டார் அறை பக்கமாக சென்றார். அங்குள்ள மின் கம்பத்திலிருந்து தாழ்வாக சென்ற மின்கம்பி, வேலு மீது பட்டு, அவரை மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற தாளமடுவை சேர்ந்த மணி, 70, என்பவர் மீதும், மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காவேரிப்பட்டணம் போலீசார் சடலங்களை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.