ADDED : மே 05, 2024 01:59 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், சூளகிரி அடுத்த மைலேப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா
மனைவி நஞ்சம்மா, 70. கடந்த, 2 மாலை, 6:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே
சென்றவர் மாயமானார். அவரது மகன் ரமேஷ், 40, கொடுத்த புகார்படி,
சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.
* தர்மபுரி மாவட்டம்,
பாலக்கோடு அடுத்த கெண்டனஹள்ளியை சேர்ந்தவர் மாதப்பன் மனைவி
கார்த்திகா, 43. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளியில் தங்கி,
கூலி வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 12 மாலை, 4:30 மணிக்கு வீட்டில்
இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் சரோஜா, 65, சிப்காட்
போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் அருகே தோரிப்பள்ளியை சேர்ந்த
டிரைவர் கோமடேஸ்வரர், 30, மீது சந்தேகம் இருப்பதாக
குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திகாவை தேடி
வருகின்றனர்.