ADDED : ஜூலை 03, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, டி.சோளபாடியை சேர்ந்த, 17 வயது மாணவி சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.டெக்., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 30 அன்று கல்லுாரிக்கு சென்ற மாணவி மாயமானார். பெற்றோர் புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், பென்னாகரம் தாலுகா, பிலப்பநாயக்கனஹள்ளி சேர்ந்த, 16 வயது மாணவி கடகத்துார் ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த மாதம், 25 அன்று முதல் மாணவி மாயமானார். பெற்றோர் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.