/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டூ வீலர்கள் மோதல்: லாரி டிரைவர் பலி
/
டூ வீலர்கள் மோதல்: லாரி டிரைவர் பலி
ADDED : பிப் 20, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வடமலம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ், 35, விவசாயி. தன் ஜூபிட்டர் பைக்கில் நேற்று முன்தினம் மாலை பாளேதோட்டம் பகுதியி-லுள்ள தன் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவரின் பின்னால் டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சென்ற புளியாண்டப்பட்-டியை சேர்ந்த லாரி டிரைவர் திருமால், 30, போச்-சம்பள்ளியிலிருந்து, பாளேதோட்டம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
இரு பைக்கும் மோதிக் கொண்டதில், திருமால் தலையில் பலத்த காய-மடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசா-ரிக்கின்றனர்.

