/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2026 07:03 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஹிந்த் மஸ்துார் சபா, கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் அமைப்பாளர்கள் மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். ஹிந்த் மஸ்துார் சபா மாவட்ட தலைவர் இளங்கோவன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ், 7,000 ரூபாய் வழங்க வேண்டும். கட்டு-மான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம், 6,000 ரூபாய் வழங்க வேண்டும். அரசு மற்றும் நத்தம் புறம்-போக்கு நிலங்களில் குடியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் மக்க-ளுக்கு நிபந்தனையின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான, 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்-பினர்.

