/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்
/
வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்
ADDED : ஜன 28, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்தவர் பழனி, 42, ஸ்கிராப் வியாபாரி. இவர், சேதமான, 20 காலி சமையல் காஸ் சிலிண்டர்களை வாங்கி, தன் சரக்கு வேனில் ஏற்றி வைத்திருந்தார்.
அந்த வேன், ஸ்கிராப் குடோன் அருகே நிறுத்தியிருந்தது. நேற்று வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில், காஸ் சிலிண்டர்கள், சரக்கு வேன் முற்றிலும் எரிந்து நாசமாகின. ஓசூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.