நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா சிட்லிங் வி.ஏ.ஓ.,வாக பணி-புரிந்து வந்தவர் ராஜேந்தர்.
இவர், தொடர்ந்து ஒரு வாரமாக, உய-ரதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல், பணிக்கு வராமல் இருந்த-துடன், வருவாய் தீர்வாய கணக்குகளை முடித்து, இதுவரை ஆர்.டி.ஓ., ஒப்புதலுக்கு வைக்கவில்லை. மேலும், வருவாய் தீர்-வாகத்தில், பொதுமக்களால் அளிக்கப்பட்ட மனுக்களின் மீது, நடவடிக்கை எடுக்காததுடன், கோட்டப்பட்டியில் நடந்த, 'மக்க-ளுடன் முதல்வர்' சிறப்பு முகாமில் கலந்து கொள்ளாமல், தன் மொபைல்போனை தொடர்ந்து, 'சுவிட்ச் ஆப்' செய்து வைத்-துள்ளார். பொதுமக்களுக்கும், வருவாய் நிர்வாகத்திற்கும் இவரது செயல்கள் ஏற்புடையதாக இல்லாததால், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து அரூர் ஆர்.டி.ஓ.,. வில்சன் ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார்.