ADDED : அக் 06, 2024 03:28 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சென்னப்ப நாயக்-கனுாரில், போலீசார் சார்பில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன் முன்-னிலை வகித்தார்.
டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமை வகித்து பேசு-கையில்,''கூலி வேலைக்காக வெளியூர் செல்லும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, போதிய விழிப்புணர்வு இல்லாததால், குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கிறது. அதை தடுக்க வேண்டும். டூவீலரில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது அவசியம். மொபைல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டு-வதை மக்கள் தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிகளை பின்-பற்ற வேண்டும். ஆன்லைன் மற்றும் தீபாவளி சீட்டு மூலம், அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் எச்சரிக்கை-யாக இருக்க வேண்டும். கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமை-யாகி வாழ்க்கையை இழக்க வேண்டாம்,'' என்றார்.இதில், பஞ்., தலைவர் முருகேசன், எஸ்.ஐ.,க்கள் கணேஷ் பாபு, மோகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.