sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ராணுவ பணியில் உயிர் நீத்தவர் குடும்பத்துக்கு நிதி

/

ராணுவ பணியில் உயிர் நீத்தவர் குடும்பத்துக்கு நிதி

ராணுவ பணியில் உயிர் நீத்தவர் குடும்பத்துக்கு நிதி

ராணுவ பணியில் உயிர் நீத்தவர் குடும்பத்துக்கு நிதி


ADDED : ஆக 11, 2011 02:36 AM

Google News

ADDED : ஆக 11, 2011 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: போர் மற்றும் போரையொட்டிய நடவடிக்கைகளில் உயிர் நீத்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கருணை தொகை வழங்கப்பட்டது.

போர் மற்றும் போரையொட்டிய நடவடிக்கைகளில் உயிர் நீத்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் தொகுப்பு நிதியில் இருந்து கருணை தொகையாக 30,000 ரூபாயும் ஆண்டு பராமரிப்பு தொகையாக இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து 4,000 ரூபாயும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த லான்ஸ் நாயக் பச்சையப்பன் மனைவி தவமணி, சுபேதார் தானப்பன் மனைவி மீனாட்சி ஆகியோருக்கு கருணை தொகை மற்றும் ஆண்டு பராமரிப்பு தொகையை கலெக்டர் மகேஸ்வரன் வழங்கினார்.மேலும், 2008ல் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த அலுவலர்களான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோருக்கு தமிழக கவர்னரின் பாராட்டு சான்று மற்றும் பதக்கங்களை கலெக்டர் மகேஸ்வரன் வழங்கினார். மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் முத்துராம், டி.ஆர்.ஓ., பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us