sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கி.கிரி மாவட்டத்தில் மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

கி.கிரி மாவட்டத்தில் மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கி.கிரி மாவட்டத்தில் மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கி.கிரி மாவட்டத்தில் மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 14, 2024 01:32 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 14-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, இரு நாட்களாக பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நீர்

வரத்து, 395 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று, 529 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து, 331 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 51.30 அடியாக நீர்மட்டம் உள்ளது. அதே போல், ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம், 560 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 830 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 17.78 அடியாக நீர்மட்டம் உள்ளதால், அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பாறு அணையில், 68 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. ஊத்தங்கரை, 48.60, நெடுங்கல், 39, பெனுகொண்டாபுரம், 32.30, போச்சம்பள்ளி, 29, பாரூர், 28, சின்னாறு அணை, 23, கிருஷ்ணகிரி, சூளகிரி தலா, 19.30, தேன்கனிக்கோட்டை, 16, கே.ஆர்.பி., அணை, 13.60, ஓசூர், 8.10, ராயக்கோட்டை, 7, கெலவரப்பள்ளி, 6, தளி, 5, என மொத்தம், 362.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.






      Dinamalar
      Follow us