/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாளை முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்
/
நாளை முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்
நாளை முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்
நாளை முதல் 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்
ADDED : ஜன 20, 2025 06:51 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை (ஜன.21) முதல், 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும், 10 ஒன்றியங்களுக்கும், தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம், மாதாந்திர பராமரிப்பு பணிகள், பாலக்கோடு கோட்டத்தில் நாளை (ஜன.21) மேற்கொள்ளப்பட உள்ளதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்பாக பாலக்கோடு அருகிலுள்ள பிரதான, 1,500 மி.மீ., டயா இரும்பு குடிநீர் குழாயில், குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை சரிசெய்யும் பணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ள இருப்பதால், நாளை முதல், 23- வரை, 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. எனவே மேற்கண்ட பகுதிகளில், இம் மூன்று நாட்களுக்கும், இருக்கும் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.