/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'எங்களுக்கு சாலையில் இறங்கி சண்டையிடவும் தெரியும்'
/
'எங்களுக்கு சாலையில் இறங்கி சண்டையிடவும் தெரியும்'
'எங்களுக்கு சாலையில் இறங்கி சண்டையிடவும் தெரியும்'
'எங்களுக்கு சாலையில் இறங்கி சண்டையிடவும் தெரியும்'
ADDED : ஜன 26, 2025 04:36 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்றிரவு கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிக-ளுக்கு வீரவணக்க
நாள் கூட்டத்தில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது: கருணாநிதி இறக்கும் வரை ஸ்டாலினை தன் அருகில் வராமல் பார்த்து கொண்டார். துணை முதல்வர் பதவியும் எளிதில் கொடுக்கவில்லை.
ஆனால் இன்று, ஸ்டாலின் தன் மகனுக்கு, 2 ஆண்டுகளிலேயே துணை முதல்வர் பதவி கொடுத்து அருகில் அமர வைத்துள்ளார். ஒவ்வொரு பகுதி-யிலும் கட்சிக்கு ஸ்டாலின் தலைவர், இந்த ஊருக்கு நான் தான் தலைவர் என, தி.மு.க.,வினர் பேசுகின்றனர்.மாவட்ட செயலா-ளரும் பர்கூர், தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வுமான மதியழகன், என் கட்சிக்காரர் நிர்மல் மீது, 20 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். நீங்கள் குற்றமற்றவர் போல் செயல்படாதீர்கள். உங்களை பற்றி பேசினால், வழக்கு போடுகி-றீர்கள், இது வேண்டாம் தம்பி. எங்களுக்கு கரையோரம் நின்று சண்டையிடவும் தெரியும். சாலையில் இறங்கி சண்டையிடவும் தெரியும். என் கட்சிக்காரர் மீது அவதுாறாக புகார் அளித்த உங்கள் மீது நானும் மானநஷ்ட வழக்கு போடச்சொல்வேன். இவ்வாறு, அவர் பேசினார்.

