/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வன உயிரின தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வன உயிரின தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 05, 2026 05:00 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், வன உயிரின தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி தலைமை வகித்தர். உதவி தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார். கலெக்டரின் வனத்தோழன் கோகுல் மற்றும் வனத்துறை கருத்தாளர் ஹரி ஆகியோர், வன விலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும், காடுகள் அழிப்பின் விளைவுகள் பற்றியும், காணொளி காட்சி மூலம் விளக்கினர். மேலும், மனித, யானைகள் மோதல்கள் குறித்தும், யானைகளிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் கருத்தாளர் ஹரி விளக்கினார்.
வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டி மற்றும் வினாடி - வினா போட்டி கள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா நன்றி கூறினார். இதில் மீண்டும் 'மஞ்சப்பை' என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் 'மஞ்சப்பை'கள் வழங்கப்பட்டன.

