sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

/

சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்


ADDED : ஜூலை 22, 2024 12:28 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 12:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், சீரான குடிநீர் கேட்டு, பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட ராம்நகரில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, 35க்கும் மேற்பட்ட பெண்கள், ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே உள்ள ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன், நேற்று காலை காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஓசூர் இருந்து தளி நோக்கி சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us