ADDED : பிப் 11, 2026 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அண்ணா நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜை நடந்தது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதில், பெண்கள் விநாயகர், மாரியம்மனுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். மேலும், அம்மனுக்கு ஆடு, கோழியை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு படைத்தனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

