ADDED : நவ 15, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சாரகப்-பள்ளி அருகே கொடியாளம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத், 34. பெல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரி-யராக உள்ளார்;
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக நிய-மிக்கப்பட்டுள்ளார். இதற்காக, கும்மாள அக்ரஹாரம் கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்-கொண்டார்.அப்போது, அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாப்-பண்ணா, 46, என்பவர், ஆசிரியர் மஞ்சுநாத்திடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் திட்டி, அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். ஆசிரியர் மஞ்சுநாத் புகார்படி, தளி போலீசார் வழக்குப்பதிந்து, பாப்பண்ணாவை கைது செய்தனர்.

