ADDED : மார் 25, 2026 07:06 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல், 64, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 16ல், பாரூர் அருகே நாகர்கோவில் கிராமத்தில் புளிய மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார்.
படுகாயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
