ADDED : செப் 22, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அவினாஷ் கொய்ரி, 27. ஓசூர் அருகே அனுமேப்பள்ளியில் தங்கி, கூலி பணியாற்றி வந்தார்.
கடந்த இரு நாட்களாக தீராத காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், காய்ச்சல் குணமாகாத நிலையில் கடந்த, 19 மாலை, 6:00 மணிக்கு வீட்டில் துாங்கினார். நேற்று முன்தினம் காலை, 6:20 மணிக்கு பார்த்த போது உயிரிழந்து கிடந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.