ADDED : அக் 24, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், சூளகிரி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் ராகவன், 55, கூலித்தொழிலாளி. கடந்த, 20ல், சூளகிரி நோக்கி டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். இரவு, 8:30 மணியளவில் சூளகிரி சிப்காட் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட் கவிழ்ந்து படுகாயமடைந்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இருந்து, மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

