/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு
/
உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஜூலை 25, 2024 01:40 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, ரோஜாவனம் டிரஸ்ட், சுவார்டு தொண்டு நிறுவனம் மற்றும் அரசு மகளிர் கலைக்கல்-லுாரி ஆகியவை இணைந்து, உலக போதை எதிர்ப்பு தின, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கை நேற்று நடத்-தின.
சுவார்டு தொண்டு நிறுவன இயக்குனர் ஜலாலுதீன் வர-வேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு சுபாஷ் பேசியதாவது:பள்ளியில், 7ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் நடத்திய சர்வேயில், மொபைல் போன்களால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக அறிவித்துள்ளனர். பள்ளிக்குழந்-தைகள் பலர் மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் உடல் நலம், மூளை வளர்ச்சி, மன நலம் பாதிப்பு-களால் மாணவர்கள் தவிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதை பொருட்கள் மற்றும் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். போதை பொருள் விற்பனை குறித்து நீங்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால், 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தவறான நடத்தையால், செயலால் உங்கள் எதிர்காலம் பாதிக்கிறது. எனவே வரும் காலத்தில் நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். சுவார்டு தொண்டு நிறுவன தலைவர் ராமமூர்த்தி, என்.எஸ்.எஸ்., அலுவலர் வள்ளி சித்ரா, போலீஸ் எஸ்.ஐ., கருணாகரன் உள்பட, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.