/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மீண்டும் 'மஞ்சப்பை' உலக மண் தினம் விழிப்புணர்வு
/
மீண்டும் 'மஞ்சப்பை' உலக மண் தினம் விழிப்புணர்வு
ADDED : டிச 10, 2025 10:41 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நி-லைப்பள்ளியில், நேற்று 'உலக மண் தினம்' கொண்டாடப்பட்டது.
இதில், நம் மண்ணின் வளத்தை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்-கவும், நிலையான விவசாய முறைகளை பின்-பற்றி, வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை விட்டுச் செல்லவும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மீண்டும் 'மஞ்சப்பை'யை பயன்படுத்த வேண்டும் என்றும், தலைமை ஆசி-ரியர் சுதாராணி மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து, மாணவ, மாணவியர் பள்ளி வளாகத்தில் 'மஞ்சப்பை' வடி-வத்தில் அமர்ந்து விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.இதில், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் அசோக்குமார், உதவி தலைமை ஆசிரியர் சங்கர், பள்ளி சுற்றுச்சூழல்
ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா, மரிய ஆனந்தி, பீமா பாய், பார்வதி உள்பட பலர் பங்கேற்றனர்.

