/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருமணமான இரு மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு
/
திருமணமான இரு மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு
ADDED : மார் 29, 2025 08:54 AM
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே அத்திமுகத்தை சேர்ந்தவர் விவசாயி பாலாஜி. இவருக்கும், கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே போத்தன ஒசஹள்ளியை சேர்ந்த பிருத்திகா, 20, என்பவருக்கும் கடந்த மாதம், 1 ம் தேதி திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த பிருத்திகா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பிருத்திகா உயிரிழந்தார். அவரது தாய் கீதா, 40, கொடுத்த புகார்படி, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்ஷய் அணில் வாகரே வழக்குப்பதிவு செய்தார். திருமணமான இரு மாதங்களில் பெண் தற்கொலை செய்ததால், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரிக்கிறார்.