ADDED : அக் 31, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்,  ஓசூர் அருகே கெலமங்கலம் செல்லும் ரயில்பாதை தண்டவாளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவல்படி, ஓசூர் ரயில்வே போலீசார் சம்பவ இடம் சென்றனர்.
அங்கு, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி இறந்து இருக்கலாம் என தெரிகிறது. சடலத்தை மீட்டு, ஓசூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

