ADDED : டிச 24, 2024 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான கோ கோ போட்டிகள் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தது.
முதல் அரையிறுதி போட்டியில் லேடிடோக் கல்லுாரி 11 - 2 புள்ளிகளில் இ.எம்.ஜி. யாதவா கல்லுாரியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் பாத்திமா கல்லுாரி 9 - 3 புள்ளிகளில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியை வீழ்த்தியது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி 8 - 4 புள்ளிகளில் யாதவா கல்லுாரியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி 13 - 7 புள்ளிகளில் பாத்திமா கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.