
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள்உறவின் முறை பத்ரகாளியம்மன் கோயிலில் 32ம் ஆண்டு உற்ஸவம் மே 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தனர்.
நேற்று முன்தினம் முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மே 21 இரவு மறுபூஜை நடக்கிறது.
நிர்வாகிகள் வேட்டையார், அருணாச்சலம், காசிராஜன், சுடலைமணி விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.