/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுயஉதவி குழுவுக்கு ரூ.100 கோடி கடன்
/
சுயஉதவி குழுவுக்கு ரூ.100 கோடி கடன்
ADDED : மே 12, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: 'சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும்' என கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்த ஆண்டு விவசாயிகளுக்கான பயிர்க்கடன் இலக்கு ரூ. 290 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.300 கோடி இலக்கில் ரூ.273 கோடி வரை கடன் வழங்கியுள்ளோம். கால்நடை பராமரிப்புக்காக ரூ.103 கோடி, நகைக் கடனாக ரூ.1330 கோடி, சிறு வணிக கடனாக ரூ.22 கோடி, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான கடனாக ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தந்த துறை சார்ந்தவர்கள் பயன் பெறலாம் என்றார்.