/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ., பொது செயலாளர் உட்பட 3 பேர் கைது
/
பா.ஜ., பொது செயலாளர் உட்பட 3 பேர் கைது
ADDED : ஆக 26, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் பிரபு 50. பா.ஜ., மாவட்ட பார்வையாளராக இவர் உள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் இவருக்கும் மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணனுக்கும் 54, முன்பகையால் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் முடிந்து இரவு 10:30 மணியளவில் கார்த்திக் பிரபுவை கொல்ல கரிமேடு சரவணப்பாண்டி 24, பாண்டியராஜன் 36, ஆகியோரை கிருஷ்ணன் அனுப்பியுள்ளார். இருவரும் ஆயுதங்களுடன் கார்த்திக் பிரபு வீட்டிற்கு சென்று மிரட்டினர். கார்த்திக் பிரபு புகாரின்பேரில் கிருஷ்ணன் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

