/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதை பொருள் வழக்கு3 பேருக்கு தண்டனை
/
போதை பொருள் வழக்கு3 பேருக்கு தண்டனை
ADDED : ஆக 07, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் மங்களத்துவிளை பிபின், 34, கேரளா கொல்லம் அருண்துளசி, 32, திருவனந்தபுரம் ஷாஜி, 48.
இவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 54 கிராம் எம்.டி.எம்.ஏ., மெத்தம் பெட்டமையின் போதைப்பொருளை, வடசேரி போலீசார் 2022ல் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.