sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டிரக் மீது கார் மோதி 5 பேர் பரிதாப பலி

/

டிரக் மீது கார் மோதி 5 பேர் பரிதாப பலி

டிரக் மீது கார் மோதி 5 பேர் பரிதாப பலி

டிரக் மீது கார் மோதி 5 பேர் பரிதாப பலி


ADDED : மார் 10, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா: மேம்பாலம் அருகில், சாலை ஓரத்தில் நின்றிருந்த டிரக் மீது, கார் மோதியதில் அதில் பயணித்த ஐவர்உயிரிழந்தனர்.

பெங்களூருவை சேர்ந்த சிலர், பெலகாவி, சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு நேற்று முன்தினம் காரில் சென்றிருந்தனர். தரிசனம் முடிந்த பின், பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.

நேற்று மதியம் 12:00 மணியளவில், சித்ரதுர்காவின் தேசிய நெடுஞ்சாலையில், தமடகல் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக சென்ற கார், சாலை ஓரம் நின்றிருந்த டிரக் மீது மோதியது. இதில் காரில் இருந்த சி.வி.ராமன் நகர் சிதம்பரம் ஆச்சார்யா, 52, ஈரண்ணா லே - அவுட் மல்லிகார்ஜுன், 50, வித்யாரண்யபுரா ருத்ரசாமி, 52, சாந்த மூர்த்தி, 60, உட்பட ஐவர் உயிரிழந்தனர். இதில் இறந்த ஒருவரின் பெயர், முகவரிதெரியவில்லை.

காரில் இருந்தவர்களில் ஒருவர் காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சித்ரதுர்கா ஊரக போலீசார், காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் உடல்களையும், நொறுங்கிய காரையும் அப்புறப்படுத்தி, போக்குவரத்தைசுமுகமாக்கினர்.






      Dinamalar
      Follow us