sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு 64 சவரன், பணம் கொள்ளை

/

ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு 64 சவரன், பணம் கொள்ளை

ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு 64 சவரன், பணம் கொள்ளை

ஆசிரியர்கள் வீட்டில் திருட்டு 64 சவரன், பணம் கொள்ளை


ADDED : ஜூலை 11, 2024 09:45 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி:மதுரை நாகப்பா நகர் கார்த்திகேயன், 50. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி தவமணி, 47. சிவகங்கை மாவட்டம், கழுவங்குளம் அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இருவரும் பள்ளிக்குச் சென்றனர். இவர்களது மகள் கல்லுாரிக்கும், மகன் பள்ளிக்கும் சென்றனர். மதியம் 3:00 மணிக்கு மகள் வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பெற்றோர் வந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 20 சவரன், 4 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல, மதுரை மேலுார் கீழையூர் ராமச்சந்திரன், 45. டில்லியில் சுகாதார ஆய்வாளராகவும், மனைவி ராதா, 42, டில்லி அரசு பள்ளி ஆசிரியையாகவும் உள்ளனர். இவர்களது மகன் ராகேஷ் பிரசன்னா, 22, சென்னையில் தங்கி எம்.டெக்., படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு ராகேஷ் பிரசன்னா வீட்டிற்கு வந்த போது முன்பக்க கிரில் மற்றும் மரக்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 44 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கீழவளவு போலீசார் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us