ADDED : மே 04, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தற்காலிக உண்டியல் எண்ணும் பணி துணை கமிஷனர் கலைவாணன் தலைமையில் நடந்தது.
இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரொக்கம் ரூ.98 லட்சத்து 62 ஆயிரத்து 978, தங்கம் 9 கிராம், வெள்ளி 175 கிராம்கிடைக்கப்பெற்றன.
இப்பணியில் உதவி கமிஷனர் வளர்மதி, மேலுார் இன்ஸ்பெக்டர் ஐம்பெருமாள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.