ADDED : ஏப் 20, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: விருதுநகர் தொகுதியில் உள்ளது பேரையூர் அருகே ஏ.பாறைப்பட்டி. மதுரை - ராஜபாளையம் ரோட்டில் உள்ள இந்த ஊரில் பஸ்கள் நிற்பதில்லை எனக்கூறி வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர். அதிகாரிகள் பேசியதை அடுத்து ஓட்டளிக்க சென்றனர்.
அதேபோல் தாதன்குளத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், மணல் குவாரி இருப்பதை கண்டித்தும் மக்கள் ஓட்டளிக்காமல் இருந்தனர். அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து ஓட்டளித்தனர்.

