sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நடுரோட்டில் டாக்டர் முதலுதவி

/

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நடுரோட்டில் டாக்டர் முதலுதவி

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நடுரோட்டில் டாக்டர் முதலுதவி

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நடுரோட்டில் டாக்டர் முதலுதவி


ADDED : ஜூன் 10, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் விபத்தில் சிக்கி காலை இழந்து துடித்த இளைஞருக்கு நடுரோட்டில் முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை விக்ரம் மருத்துவமனை டாக்டர் நாராயணசாமியை பொது மக்கள் பாராட்டினர்.

மதுரை மஞ்சம்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் 26. இவர், சத்திரப்பட்டி - நத்தம் நான்குவழிச் சாலையில் சத்திரப்பட்டி அருகே டூவீலரில் கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு கடந்தார். அப்போது நத்தம் நோக்கி விரைந்து வந்த கார் அவர் மீது மோதியதில் துாக்கியெறியப்பட்டார். ஒரு கால் முறிந்து, எலும்பும், நரம்பும் துண்டித்து தொங்கிய நிலையில் ரோட்டில் துடித்துக் கொண்டிருந்தார். ரத்தமும் ஏராளமாக வெளியேறியது.

அவ்வழியாக வந்தவர்கள் செய்வதறியாது, காயமுற்றவர் அருகே செல்ல தயங்கி நின்றிருந்தனர். அதேநேரம் அவ்வழியாக டாக்டர் நாராயணசாமி காரில் வந்தார். உயிருக்கு போராடிய செல்வக்குமாரை பரிசோதித்து, உடனே சில முதலுதவி சிகிச்சையை அளித்தார். முறிந்து தொங்கிய காலில், அப்பகுதியில் கிடைத்த தென்னை மட்டையை வைத்து கட்டி ரத்தக் கசிவை கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சை அளித்தார்.

ஆம்புலன்ஸ் வந்ததும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நடுரோட்டில் விபத்தில் இளைஞர் உரிய நேரத்தில் கிடைத்த சிகிச்சையால் உயிர் பிழைத்தார். பொதுமக்கள் அவரை பாராட்டினர். விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us