sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேகத்தடையால் தொடருது விபத்து

/

வேகத்தடையால் தொடருது விபத்து

வேகத்தடையால் தொடருது விபத்து

வேகத்தடையால் தொடருது விபத்து


ADDED : பிப் 24, 2025 03:47 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம்- இரும்பாடி இடையே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2023ல் துவங்கியது.

இப்பால பணிகள் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகிறது. பாலத்தை இணைக்கும் பகுதியில் குருவித்துறை ரோடு பால சந்திப்பில் 2, வளைவில் 1 என வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் கறுப்பு, வெள்ளை வண்ணம் பூசப்படவில்லை. இங்கு வேகத்தடை இருப்பது கண்ணுக்கு தெரியாததால் அருகில் வந்ததும் திடீரென பிரேக் அடிக்கும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். புதிதாக வருவோர் அதிகளவில் விழுந்து காயமடைந்துள்ளனர். இப்பகுதி பாலத்தில் மின் விளக்குகள் இல்லை.

இரவு பகல் நேரங்களில் பாலம், 'பாராக' மாறி விடுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை பலகை, வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசவும், பாலத்தில் மின் விளக்குகளை பொருத்தி கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us