ADDED : ஜூன் 29, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் ஒன்றியம் விரகனுார் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
சாலைகள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா ஆய்வு செய்யாமல் கலெக்டர் அலுவலகம் சென்றதை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர் பார்த்திபராஜன் வாயில் கருப்பு துணி கட்டி 3 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் மாலையில் பிரேமா ஆய்வு செய்தார்.