ADDED : மே 26, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்வேலிப்பட்டியில் மாணவி அபிஷா வாழை மரத்தில் வாடல் நோய் வராமல் தவிர்க்க ஊசி மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தவும், கார்பன்டாசிம் 60 மி.கி., மாத்திரை மற்றும் கார்பன்டாசிம் 3 மி.லி., ஊசியை வாழை மரத்தில் செலுத்தி செயல் முறையில் விளக்கினார்.