நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியத்தில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மாணவிகள் காவியலட்சுமி, ராகவி, ஷர்மிலி, அபிநயா, ஜெயதுர்கா தேவி, மரிய ஆன்சி, லாவண்யா, காவியலட்சுமி ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி மற்றும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குட்லாடம்பட்டி புடலங்காய் பந்தலில் பழ, ஈ, பூச்சிகளை, கருவாட்டு பொறி மூலம் கட்டுப்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு செயல்முறையில் விளக்கமளித்தனர். தாதம்பட்டி விவசாயி மணிமாறன் தென்னந்தோப்பில் உறிஞ்சு பூச்சிகளை மஞ்சள் ஒட்டு பொறி கொண்டு கட்டுப்படுத்தும் முறையை விளக்கினர்.