ADDED : மே 11, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில், 1991–94 கல்வியாண்டு மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்தனர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆசிரியர் ஆறுமுகம் கூறுகையில், ‘‘அனைவரும் இணைந்து பொது நிதி அமைத்து தொழில் முயற்சிகளை தொடங்கியுள்ளனர். அதன் பயனை தங்களது வாரிசுகளுக்கு அளிக்கும் நோக்கில் ‘கடம்பா 2026’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து 13வது ஆண்டாக கல்லுாரிக்கு வந்துள்ளனர்’’ என்றார். கல்லுாரி நிர்வாகத்திற்கு சுவர் கடிகாரம் அன்பளிப்பாக வழங்கபட்டது.
