ADDED : செப் 07, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு மருத்துவமனை டாக்டர் புஷ்பவாணி, 33. நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு மயங்கிய சங்கங்கோட்டை ஆட்டோ டிரைவர் ராஜபாண்டியை, சிகிச்சைக்காக அதே பகுதி சந்தனபாரதி, 24, விக்கி, 25, மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
டாக்டர் புஷ்பவாணியிடம் மது போதையில் தகராறு செய்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். டாக்டர் புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.