ADDED : ஆக 09, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 54 வாகனங்கள் நாளை(ஆக.,10) காலை 10:30 மணிக்கு ஏலம் விடப்படுகின்றன.
எஸ்.பி., அரவிந்த் தலைமையில் மாவட்ட ஆயுதப்படையில் நடக்கும் இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இன்று வாகனங்களை பார்வையிடலாம். முன்பணமாக டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு பிரிவில் செலுத்தி ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.