sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி

/

சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி

சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி

சோழவந்தானில் அலறும் ஒலிபெருக்கிகளால் அவதி


ADDED : ஜூன் 17, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: வைகாசி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் வீதிகளில் அலறும் விளம்பரஒலிபெருக்கிகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இங்குள்ள ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 10ல் துவங்கி 17 நாட்கள் நடக்கிறது. இத்திருவிழாவையொட்டி தனியார் நிறுவனம் ஒலிபெருக்கிகள் மூலம் காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை இடைவிடாமல் அதிக சத்தத்தில் விளம்பரங்களை அலற விடுகிறது.

இதற்காக வட்ட பிள்ளையார் கோயில் துவங்கி பெரிய கடை வீதி மார்க்கெட் வீதிகளில் பள்ளிகள், மருத்துவமனைகள் அருகே ஸ்பீக்கர்கள், தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ குழாய்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள், முதியோர் பாதிக்கப்படுகின்றனர்.

சமூக ஆர்வலர் மாணிக்கமூர்த்தி: ஒலி பெருக்கிகள் அலறுவதால் சாலையில் நடப்போருக்கு வாகன சத்தம் கேட்பதில்லை. கடைகளில் வியாபாரம் செய்வோர் சிரமப்படுகின்றனர். புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us