ADDED : செப் 01, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
மதுரை, : மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை சார்பில் கண், உடல் உறுப்பு தானம் குறித்து கருத்தரங்கு நடந்தது.
செயலாளர் லட்சுமி குமரன் சேதுபதி தலைமை வகித்தார். துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி வரவேற்றார். கண் தான விழிப்புணர்வில் உலக சாதனை புரிந்த கணேஷ் பேசினார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் செல்வத்தரசி நன்றி கூறினார்.
