sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கடன்திட்டம்

/

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கடன்திட்டம்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கடன்திட்டம்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கடன்திட்டம்


ADDED : ஜூன் 28, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 'டாப்செட்கோ' ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பு மூலம் கடன், புதிய பொற்கால திட்டம், சிறுவணிக கடன் திட்டங்களின் கீழ் வியாபாரம், தொழில் துவங்கவும், செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்யவும் கடன் பெறலாம்.

இக்கடன் தொகை பெற 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறத்தினருக்கு ரூ.98 ஆயிரம், நகர்ப்பகுதியினருக்கு ரூ.3 லட்சம் வரை இருக்க வேண்டும்.

விரும்புவோர் விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம், இருப்பிடம், ஆதார், கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கையுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us