sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வங்கி ஏ.டி.எம்.,மை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை

/

வங்கி ஏ.டி.எம்.,மை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை

வங்கி ஏ.டி.எம்.,மை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை

வங்கி ஏ.டி.எம்.,மை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை


ADDED : ஜூலை 07, 2024 02:29 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - பாகலுார் சாலையில், ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுத்துள்ளார். அதன் பின் எந்தவிதமான பண பரிவர்த்தனையும் ஏ.டி.எம்., மையத்தில் நடக்கவில்லை. மணிக்கணக்கில் பரிவர்த்தனை நடக்காததால், வங்கி டெக்னீசியன் பிரிவுக்கு சந்தேகம் வந்தது.

இதனால் நேற்றிரவு, 7:00 மணிக்கு மேல், ஏ.டி.எம்., மையத்திற்கு ஊழியர்கள் சென்று பார்த்தனர். அங்கு மையத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. திறந்து பார்த்த போது, காஸ் வெல்டிங் வாயிலாக ஏ.டி.எம்., இயந்திரம் உடைக்கப்பட்டு, அதற்குள் இருந்த, 14.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. ஊழியர்கள் கொடுத்த தகவல்படி, ஹட்கோ போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம்., மையத்தில் இருந்த 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவில், மர்ம நபர்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு தற்போது கொள்ளையடிக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் இருந்து, சற்று தொலைவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்.,ல் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். காவலாளி எழுந்து வந்ததால் மர்ம கும்பல் தப்பி சென்றது.

ஆனால் ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் காவலாளி இல்லாததால், கொள்ளை சம்பவத்தை மர்ம கும்பல் அரங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us